தூர்வாரச் செய்த அடிகளார்
அறுபத்துமூவரில் ஒருவரான தண்டி அடிகளாருக்கு அவர் பிறந்த திருவாரூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார், ""கண் பார்வையற்ற தண்டி அடிகளார் திருவாரூர் கமலாலயக்குளம் பாழ்பட்டு
அறுபத்துமூவரில் ஒருவரான தண்டி அடிகளாருக்கு அவர் பிறந்த திருவாரூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார், ""கண் பார்வையற்ற தண்டி அடிகளார் திருவாரூர் கமலாலயக்குளம் பாழ்பட்டு கிடப்பதைக் கேட்டறிந்து, கவலையுற்றதோடு நின்றுவிடாமல் குளக்கரையில் ஒரு கம்பையும், குளத்தினுள் ஒரு கம்பையும் நட்டு வைத்து அதில் கயிற்றைக் கட்டி, அக்கயிற்றைப் பிடித்துக்கொண்டே தூர்வாரினார். அவர் தூர்வாரிய கமலாலயக்குளம் இன்று பாசி படர்ந்து, மாசுபட்டு தூர்வாரப்படாமல் இருக்கிறது. அவருக்கு விழா எடுக்கும் நாம் அவர் வழியில் அக்குளத்தை தூர்வார வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார். மேடையிலேயே தண்டி அடிகளாரின் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக குன்றக்குடி அடிகளார் பொறுப்பேற்று கமலாலயக்குளம் தூர்வாரப்பட்டது.
(இரெ. சண்முகவடிவேலின் தமிழ் வளர்த்த சான்றோர்கள் நூலிலிருந்து)