தமிழ் நூலகம்
ராஜாஜி நடுவண் அரசில் அமைச்சராக இருந்த போது ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்குச் சென்றார். அங்கே மொழிகள் பலவற்றிற்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது.
ராஜாஜி நடுவண் அரசில் அமைச்சராக இருந்த போது ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்குச் சென்றார். அங்கே மொழிகள் பலவற்றிற்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அங்கு தமிழ்மொழிக்கு இடம் இல்லாததை அறிந்து அவர் ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு கடிதம் எழுதி செய்தியைத் தெரிவித்தார்.
ராஜாஜி வேண்டுகோளை ஏற்ற அவர் சாந்திநிகேதனில் தமிழ் நூலகம் அமைக்க ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு நன்கொடை அளித்து ரசிகமணி டி.கே.சி மூலம் தமிழ்நூல்களை வாங்கச் செய்து அவருடன் கல்கியையும், சின்ன அண்ணாமலையையும் அனுப்பி சாந்தி நிகேதனில் தமிழ் நூலகம் நிறுவச் செய்தார்.