மூக்குத்தி ஆசை
தமிழில் "பூ', "மரியான்', "சென்னையில் ஒரு நாள்', "பெங்களூர் நாட்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழில் "பூ', "மரியான்', "சென்னையில் ஒரு நாள்', "பெங்களூர் நாட்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கரோனா பொது முடக்க நேரத்தில் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். தற்போது பார்வதி சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நீண்டநாள் ஆசையான மூக்கு குத்திக்கொள்ளும் வைபவத்தைத் தனது வீட்டிலேயே அரங்கேற்றி இருப்பதாகப் பார்வதி பதிவு செய்துள்ளார். இதுபற்றி கூறியுள்ள பார்வதி, ""உரிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் மூக்கு குத்தி குத்திக்கொண்டேன். மூக்குத்தி அணிந்த பின்னர் நானும் எனது தாயைப்போலவே இருப்பதை உணர்ந்தேன். அம்மா குட்டியைப்போல ஒரு அம்மிணிக்குட்டி'' என்று கூறியதுடன் தனது தாயின் மூக்குத்தி அணிந்த புகைப்படத்தையும் சேர்த்துப் பகிர்ந்துள்ளார்.