முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குரலை மாற்றிப்பாட முடியாது

பாடகர் டி.எம்.செளந்தரராஜனைப் போல குரலை மாற்றிப்பாட யாராலும் முடியாது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:


பாடகர் டி.எம்.செளந்தரராஜனைப் போல குரலை மாற்றிப்பாட யாராலும் முடியாது.

1950-ஆம் ஆண்டு முதல் 70 களின் கதாநாயகர்கள், துணை கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் டி.எம்.எஸ் தமக்கு பாடமாட்டாரா என்று தவம் கிடந்தார்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், தவிர ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எஸ்.ஏ.அசோகன், ஆனந்தன், ஏ.வி.எம். ராஜன், முத்துராமன், கல்யாண்குமார், உதயகுமார், சிவகுமார், விஜயகுமார், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், எம்.ஆர்.ராதா என்று எவருமே டி.எம்.எஸ்ûஸ விட்டு வைக்கவில்லை.

புதிய படங்களின் இசைத் தட்டுக்கள் புதிதாய் வெளியாகிற போது அவற்றை வீதியெங்கும் கேட்கும்படி ஒலிபரப்பிப் பிரபலப்படுத்துவது அந்தக்கால சவுண்ட் சர்வீஸ் கடைகளின் வழக்கமாயிருந்தது.

"காவல்காரன்' ரிலீஸான புதிதில் "நினைத்தேன் வந்தாய் நூறுவயது, கேட்டேன் தந்தாய் ஆசைமனது' என்றப் பாட்டு காந்தமாய் இழுக்கும்.

(ஏ.ஏ. ஹெச்.கே. கோரி எழுதிய "ஊருக்கு ரெண்டு கதை' நூலிலிருந்து)

முழு கட்டுரையைப் படிக்க →