குவாலியர் தட்டு!
குவாலியர் - சிந்தியா அரச குடும்பத்துக்குச் சொந்தமானது, குவாலியர் நகரிலுள்ள ஜெயவிலாஸ் அரண்மனை. குவாலியர் அரசர்களின் கோட்டையாகவும் அரண்மனையாகவும் விளங்கியது.
குவாலியர் - சிந்தியா அரச குடும்பத்துக்குச் சொந்தமானது, குவாலியர் நகரிலுள்ள ஜெயவிலாஸ் அரண்மனை. குவாலியர் அரசர்களின் கோட்டையாகவும் அரண்மனையாகவும் விளங்கியது.
ஜெயவிலாஸ் அரண்மனையில் எத்தனையோ விலை மதிக்க முடியாத கலைப் பொருள்கள் இருக்கின்றன. வைரங்களும், வைடூரியங்களும் பதிக்கப்பட்ட உடை வாள்கள், சிம்மாசனங்கள், கட்டில்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜெயவிலாஸ் அரண்மனையின் மிகப் பெரிய அதிசயப் பொருள், அங்கே இருக்கும் சாப்பிடும் தட்டுகள். பச்சை நிறத்திலுள்ள இந்தத் தட்டுகளின் தனித்துவம் என்னவென்றால், அதில் விஷம் கலந்த உணவுப் பொருள்கள் பரிமாறப்பட்டால், அந்தத் தட்டு சிவப்பு நிறமாக மாறிவிடும்.
அந்தத் தட்டுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.