ஒரு சமயம் புதுச்சேரி கடற்கரையில் பாரதிதாசன், ஒரு வழக்குரைஞர், ஒரு நீதிபதி மூவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
வழக்குரைஞர் அப்பொழுது சென்னை நகரின் தோற்றம், கடற்கரை, உயர்நீதி மன்ற கட்டடம், சட்டமன்றம் இப்படியாக வர்ணித்துக் கொண்டிருந்தார்.
கவிஞர் பாரதிதாசன் அதை ஆமோதிப்பதைப் போல் தலையசைத்தபடி இருந்தார்.
நீதிபதி கவிஞரின் காதில், ""சென்னையைப் பற்றி பேச்சை நிறுத்திவிடுங்கள். நான் சென்னைக்குப் போனதும் இல்லை; பார்த்ததும் இல்லை'' என்று ரகசியமாகக் கூறினார்.
கவிஞர் நீதிபதியிடம், "" அப்படியே சைக்கிளைப் பற்றிய பேச்சு தொடங்கினாலும் அதை நிறுத்திவிடுங்கள்'' என்றார். ஏனெனில் கவிஞருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.