முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தபால்காரர்

கேரளாவில் மன்னராட்சியின் போது தபால்காரரை "அஞ்சல் ஓட்டக்காரன்' என்றழைத்தனர்.

Updated On : 7 மார்ச், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:10 AM

கேரளாவில் மன்னராட்சியின் போது தபால்காரரை "அஞ்சல் ஓட்டக்காரன்' என்றழைத்தனர். தமிழக கேரள எல்லையில் மறையூர் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த கண்ணன் என்பவர் 90 வயதில் காலமானார். திருவாங்கூர் மன்னராட்சியின் போது அரசு ஆவணங்களை வேறு ஊருக்கு எடுத்துச் செல்பவரைதான் "அஞ்சல் ஓட்டக்காரர்' என்பர்.

கண்ணன் 1950-ஆம் ஆண்டுகளில் வாகனங்கள் மிகக் குறைவாக இருந்த போது, இவர் காட்டுப் பாதைகளில் தினமும் 16 கி.மீ தூரம் சென்று வேலை செய்து வந்தார். அரசு முத்திரை பதித்த ஈட்டி, பல மணிகள் பொருத்திய பட்டை மற்றும் மற்றொரு கையில் மணி இது தான் அவர் வேடம். ஓய்..ஓய் என்று கூவியபடியே ஓடும் இவரை யாரும் தடுக்க முடியாது. தடுத்தால் ஈட்டியால் தாக்குவார். அச்சமயத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் சட்டப்படி அது குற்றமாகாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.