பறந்து கொண்டே ரசிக்கலாம்!
வெளிநாடுகளைப் போன்று பலூனில் பறந்த படியே விலங்குகளையும், பறவைகளையும் ரசிக்கும் வசதி நமது இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளைப் போன்று பலூனில் பறந்த படியே விலங்குகளையும், பறவைகளையும் ரசிக்கும் வசதி நமது இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் 716 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பந்தாவ்கர் தேசியப் பூங்கா உள்ளது. இங்கு, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களின் வாழ்விடமாக இந்தப் பூங்கா உள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக இந்த தேசிய பூங்காவில் வெப்பக்காற்று நிரப்பிய பலூனில் பறந்து சென்று வன விலங்குகளை கண்டுகளிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இது பற்றி கேட்ட போது, மியான்மரில் தான் இது போன்று பலூனில் பறந்து கொண்டே நகரங்களை சுற்றி பார்க்கும் வசதியுண்டு.
இப்போது மத்திய பிரதேசத்திலும் இது போன்ற விலங்குகளையும், பறவைகளையும் பறந்து கொண்டே பார்ப்பது புதிய அனுபவமாக உள்ளது. இதற்காக சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது கரோனா காலம் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி பூங்கா மூடப்
பட்டுள்ளது.
Advertisement
இந்தியாவிலேயே முதன்முறையாக விலங்குகள் சரணாலயத்தில் பறந்து கொண்டே விலங்குகளை ரசிக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.