முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மாண்புமிக்க மெய்யறிவு

ஆப்ரிக்காவில் மருத்துவப் பணியாற்றிய ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளைக் கற்றுணர்ந்து அதன் கருத்துகளில் உள்ளந் தோய்ந்த சிந்தனையாளர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:


ஆப்ரிக்காவில் மருத்துவப் பணியாற்றிய ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளைக் கற்றுணர்ந்து அதன் கருத்துகளில் உள்ளந் தோய்ந்த சிந்தனையாளர். ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொருவரும் தமக்குத் தாமே செய்ய வேண்டிய கடமை என்ன, மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன என்பவற்றை யெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும் வள்ளுவர் பேசுகிறார். 

உலக இலக்கியத்தில் இத்துணை மாண்பு மிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்துணைச் சிறப்பாகப் பொலிவு பெறவில்லை என்று கூறலாம் என்பது ஆல்பர்ட் சுவைட்சரின் கருத்து.

Advertisement

"செயல் மூலமாகவும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயலுகிறதே! அதற்காகச் செயலில் ஈடுபடு' என்பது வள்ளுவர் இடும் கட்டளையாகும்' என்கிறார் ஆல்பர்ட்டு சுவைட்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments