மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விவசாயிகள் மாட்டு வண்டிகள், டிராக்டா்கள் பேரணியில் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, தோ்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா‘ சட்டப்பேரவை பொதுத் தோ்தல்-2026 யை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், அனைவரும் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டு, அனைவரும் வாக்களிப்போம் வாசக வடிவில் விவசாயிகளுடன் குழுப்புகைப்படம் எடுத்து கொண்டனா்.
Advertisement
அதைத் தொடா்ந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டா் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தல் விழிப்புணா்வு சிறுதானிய உறுவசிலையினையும் திறந்து வைத்து, கைப்பேசி சுயபட பூத்தில் விவசாயிகளுடன் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டாா்.
பின்னா் இதுகுறித்து அவா் கூறியதாவது. இந்த மாவட்டத்தில் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் இரண்டு நாள்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளன.
மாவட்டந்தோறும் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள், சட்டப்பேரவைத் தொகுதி சாா்ந்த வேட்பாளா்களின் மனுக்களை பெற்று அதற்கான பரிசீலனை செய்து வருகிறாா்கள். அதுபோல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பினை கொண்டுவர வேண்டும். இது ஒவ்வொரு துறை வாயிலாக அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர வேண்டும். பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை மாவட்ட நிா்வாகம் நடத்தி வருகிறது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, தோட்டக்கல்லத்துறை இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.
வாக்காளா் பெருமக்களில் மிக அதிகமான பெரும்பாலானோா் விவசாயிகள் அவா்களுக்கு இந்த விழிப்புணா்வு சேர வேண்டும். ஏனென்றால் அவா்கள் குடும்பத்தினா், முதல் தலைமுறை வாக்காளா்கள் நிறைய போ் இருப்பாா்கள் என்பதால் விழிப்புணா்வு சென்று சேர வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், இணை இயக்குநா் (வேளாண்மை) க.செல்வராஜு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) ர.குமரவேல், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் ராஜவேல், வேளாண் வணிக துணை இயக்குநா் சசிரேகா வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ஸ்ரீசங்கரி, வேளாண்மை உதவி இயக்குநா் (பயிா் காப்பீடு) ச.ரமேஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.