முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

அன்னையின் பெருமை

அன்னை தெரசா பாம்பே சாலையில் கடை வீதிகளில் நன்கொடை கேட்டு வந்த போது ஒரு கடைகாரர் மூடு சரியில்லாத நிலையில் இருந்த போது அன்னை அவரிடம் நன்கொடை கேட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

அன்னை தெரசா பாம்பே சாலையில் கடை வீதிகளில் நன்கொடை கேட்டு வந்த போது ஒரு கடைகாரர் மூடு சரியில்லாத நிலையில் இருந்த போது அன்னை அவரிடம் நன்கொடை கேட்டார். அவர் கோபத்துடன் தன் வாயில் இருந்த வெற்றிலை பாக்கு எச்சிலை அன்னையின் முகத்தில் துப்பினான். அன்னை சிறிதும் கவலைப்படாமல் முகத்தை துடைத்து விட்டு "இது எனக்கு நீங்கள் கொடுத்தது ஏற்றுக்கொண்டேன். என் பிள்ளைகளுக்கு ஏதாவது நன்கொடை கொடுங்கள்'  என்றார். அந்த கடின மனம் படைத்த கடைக்காரர் அன்னை தெரசாவை பார்த்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு பெரும் தொகையை கொடுத்தார். அன்னையின் பெருமை அவரை மனிதன் ஆக்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.