கல்லூரியும் பெயரும்..!
மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, ஆரம்பத்தில் நெல்லை இந்துக் கல்லூரி என்று திருநெல்வேலி வீரராகபுரத்தில் 1929-இல் இயங்கியது.
மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, ஆரம்பத்தில் நெல்லை இந்துக் கல்லூரி என்று திருநெல்வேலி வீரராகபுரத்தில் 1929-இல் இயங்கியது.
கல்லூரி முதல்வராக அலெக்சாண்டர் ஞானமுத்து பணியாற்றியபோது, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மதுரை திரவியம் பிள்ளையை அணுகினார்.
உடனே ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து, கல்லூரி இயங்க உதவினார். அவரது கொடைத் தன்மைக்காக, கல்லூரியின் பெயர் "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி' என்று பெயர் மாற்றப்பட்டது.