ரயில் தண்டவாளங்களில் கற்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். இந்தக் கற்கள் 'டிராக் பேலாஸ்ட்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை கற்களைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?
கூழாங்கற்கள் போன்ற கற்களைப் பயன்படுத்தினால், ரயில் கடக்கும்போது அவை ஒன்றுடன் ஒன்று சறுக்கும். அதிகம் நகராத கற்களே ரயில் பாதைகளுக்கு ஏற்றது. கூர்மையான விளிம்புகள் கொண்ட இந்தக் கற்கள் தண்டவாளத்தை சரியான இடத்தில் நிலைநிறுத்த உதவுகின்றன.
இந்தக் கற்களானது ரயில் பாதைகளில் தாவரங்கள் வளர அனுமதிக்காது. இதனால் தண்டவாளங்களில் ரயில் இடையூறு இல்லாமல் செல்ல முடியும்.
'டிராக் பேலாஸ்ட்' ரயில் பாதையில் தண்ணீர் சேர்வதைத் தடுக்கிறது. இது முற்றிலும் தடுக்காது என்றாலும், தண்டவாளத்தின் அடியில் அல்லது அதைச் சுற்றி சரியான வடிகால் வசதியை வழங்கி தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்கிறது.
தண்டவாளத்தின் மீது ரயில்கள் கடந்து செல்லும்போது, கடுமையான அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகள் அருகிலுள்ள கட்டடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்தக் கூர்மையான கற்கள் தண்டவாளங்கலில் ஏற்படும் அதிர்வுகளை சற்று குறைக்கிறது.
தண்டவாளத்தின் மீது ரயில்கள் செல்லும்போது, அழுத்தம் காரணமாகத் தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு கற்கள் நிரப்பப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.