பன்முகத்தன்மையாளர்...
ஹிந்தி, மராத்தி திரையுலகில் மிகச் சிறந்த, செல்வாக்கு மிக்க நடிகராக உள்ள ஏழுபத்து நான்கு வயதாகும் நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர்.
ஹிந்தி, மராத்தி திரையுலகில் மிகச் சிறந்த, செல்வாக்கு மிக்க நடிகராக உள்ள ஏழுபத்து நான்கு வயதாகும் நானா படேகரின் இயற்பெயர் விஸ்வநாத் படேகர்.
ராணுவத்தில் சில ஆண்டுகள் லெப்டினென்ட் கர்னலாக பணிபுரிந்து, 1999-இல் நடைபெற்ற கார்கில் போரில் பங்கேற்றவர். 'மராத்தா லைட்' காலாட் படை பிரிவில் பணி புரிந்தவர்.
நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைப்பட ஆலோசகர்.. எனப் பன்முகத்தன்மைகளைக் கொண்ட இவர், மூன்று தேசியத் திரைப்பட விருதுகளை வென்றவர், 'அனுபூதி' என்ற தொண்டு நிறுவனத்தை இவர் தொடங்கி, விவசாயிகள், வறட்சியில் தவித்தவர்களுக்கு உதவி வருகிறார். மும்பையில் வசித்த இவர், தற்போது மாநகருக்கு வெளியே வசிக்கிறார்.
Advertisement
Advertisement
'தற்போது 'வன்வாஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தப் படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் 'ஆனந்த்' படம் போல் இருக்கும். நகைச்சுவையும், அழுகையும் கலந்திருக்கும். என்னிடம் வரும் பல ஸ்கிரிப்டுகளை ஏற்பதில்லை. நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்' என்கிறார் நானா படேகர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.