முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ஒரு நாள் இரவில்...

புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' குட் டே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜூன் 2025, 12:25 am IST
பகிர்:

புதுமுக நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' குட் டே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அரவிந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் காளி வெங்கட்,

'மைனா' நந்தினி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள், வேல. ராமமூர்த்தி, ஜீவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மதன் குண தேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். காவலர்கள்- காவல் நிலையம்- காவல்துறை பின்னணியில் நகைச்சுவைப் படைப்பாகத் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நியூ மாங்க் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரித்திருக்கிறார்.

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசும் போது..'' எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது.

இப்போதுள்ள வாழ்வில் அனுதினமும் சவால்தான். எண்ணங்கள் பொருந்தி போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது மனித வாழ்வுக்கும் பொருந்தும். ஒரு எளிய மனிதனின் ஒரு நாள் இரவுதான் கதை. அதில் சுவாரஸ்யம் என்ன... அவனின் கோபம்... என்ன என்பது கதையை இன்னும் வலுவாக்கும் சக்தி'' என்றார் அரவிந்தன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments