தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?
கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்
சொற்சோரா தாரோ இலர்.    (பா}94)

மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!  நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும்,  (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள்.  நல்ல குடியின்கட் பிறவாதார்,  (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எது பற்றி? யாவரே யாயினும்,  சொல்லின்கண் சோர்வுபடாதார் இலர்."சொற்சோரா தாரோ இலர்' என்பது பழமொழி. 

"காட்டும் குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்' என்பது திருக்குறள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT