தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.    (பா-102)

பாண்டியனும்,  எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து, தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று, கதவையிடித்த குற்றத்தை நினைத்து  தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்)  அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச் செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை. (க-து.) அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீய செயல்களைச் செய்யார். "காணார் எனச் செய்யார் மாணா வினை' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோதத் திருவிழா!

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

பயன்படுத்தப்பட்ட வாகனங்கள்: போக்குவரத்து ஆணையா் முக்கிய உத்தரவு

SCROLL FOR NEXT