முகப்பு
தமிழ்மணி

ஆசிரிய மேகம்!

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம்கேட்டு, தமிழ்மொழியில் வல்லுநரான தேவராசப் பிள்ளை "குசேலோபாக்கியானம்' முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

தமிழ்மணி

ஆசிரிய மேகம்!

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம்கேட்டு, தமிழ்மொழியில் வல்லுநரான தேவராசப் பிள்ளை "குசேலோபாக்கியானம்' முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம்கேட்டு, தமிழ்மொழியில் வல்லுநரான தேவராசப் பிள்ளை "குசேலோபாக்கியானம்' முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
 அந்த நூலை யாத்த காலத்தில், கடவுள் வணக்கம் முதலிய கூறி புதுமையாக ஆசிரிய வணக்கம் கூறியுள்ளார். ஆசிரிய வணக்கப் பாடலில், "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திரிசிராமலையில் வளர்ந்து கலைக்கடலை உண்டு தனது மனமாகிய மலையில் தமிழ் மழையைப் போதுமளவு பொழிந்த அறிவாகிய பொய்கையை நிரப்பிய மீனாட்சிசுந்தரமாகிய மேகத்தை விரும்பி நாம் வாழ்வோம்' என உருவக அணியிலமைந்த பாடலைப் பாடியுள்ளார்.
 சீராருந் திரிசிரா மலையின்வளர்ந்
 தெக்காலுஞ் சிறப் பினோங்கும்
 ஏராருங் கலைககடன் முற்றுண்டாங்கு
 நின்றெழீஇ யென்வி வேக
 வாராருந் தடம்நிரம்ப மனப்பறம்பின்
 இனியதமிழ் மாரி பெய்த
 பேராரு மீனாட்சி சுந்தரதே
 கமுகிலைப் பேணி வாழ்வாம்!
 மனத்தை மலையாகவும்; தமிழை மழையாகவும்; அறிவைப் பொய்கையாகவும்; ஆசிரியப்பிரானை மேகமாகவும் உருவகம் செய்து பாடியிருப்பது பாடி இன்புறத்தக்கது.
 -சோமசுந்தர வேலாயுதம்
 
 

முழு கட்டுரையைப் படிக்க →