தமிழ்மணி

 தற்புகழ்ச்சி வேண்டா!

தினமணி

பழமொழி நானூறு
 செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்
 தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம்
 வீரஞ்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
 சோரப் பொதியாத வாறு. (பாடல் -131)
 தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள் தம்மீது, புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும் பொருட்டு களிப்புற்ற இடத்தும், தம்மிடத்து உளவாம் வீரஞ் சொல்லாதிருத்தலையே விரும்புக (அது). தன்னிடத்துள்ள குற்றங்களைத் தானே ஒன்று சேர்த்து மிகுத்துக் கூறாதவாறு ஆகும். (க-து.) வீரர்கள் பிறர் பாராட்டும் பொருட்டுத் தம்மைத் தாம் புகழ்தல், தம்முடைய குற்றங்களைத் தாமே கூறுதல் போலாம். "சோரம் பொதியாத வாறு' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT