தமிழ்மணி

பழமொழி நானூறு

நாணார் பரியார் நயனில செய்தொழுகும்பேணா அறிவிலா மாக்களைப் பேணி ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்

DIN


நாணார் பரியார் நயனில செய்தொழுகும்
பேணா அறிவிலா மாக்களைப் பேணி 
ஒழுக்கி அவரோ டுடனுறை செய்தல்
புழுப்பெய்து புண்பொதியு மாறு. (பாடல்-142 )


நாணத்தக்கனவற்றிற்கு நாணாராய் நன்மையில்லாத செயல்களைச் செய்து ஒழுகுகின்ற, யாவரானும் விரும்பப்படாத அறிவு இல்லாத விலங்கு ஒப்பாரை, விரும்பி நடத்தி,  அவருடன் கூடி வாழ்தலைச் செய்தல்,  புழுவினை உள்ளே இட்டுப் புண்ணை மூடிவைத்ததோடு ஒக்கும். (க-து.) தீயாரோடு உடனுறையின் தீமையே விளையும்.  "புழுப் பெய்து புண் பொதியுமாறு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT