முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

நீர்வளம் நிறைந்த பொய்கைகள் மிகுதியாயிருக்கும் ஊரனே! பொருத்தமற்ற வேடிக்கைப் பேச்சினை ஒருவரால் எடுத்துச் சொல்லப்பட்டவர்கள், அவர் தம்மை வைதனர் என்றே கொண்டு, அவர் தொடர்பைக் கைவிட்டுவிடுவது தவறு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர்
வைதாரக் கொண்டு விடுவர்மன் - அஃதால்
புனற்பொய்கை ஊர! விளக்கெலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல் (பாடல்-189)


நீர்வளம் நிறைந்த பொய்கைகள் மிகுதியாயிருக்கும் ஊரனே! பொருத்தமற்ற வேடிக்கைப் பேச்சினை ஒருவரால் எடுத்துச் சொல்லப்பட்டவர்கள், அவர் தம்மை வைதனர் என்றே கொண்டு, அவர் தொடர்பைக் கைவிட்டுவிடுவது தவறு. அப்படிச் செய்வது, எலி விளக்கைக் கொண்டு ஏறி அதன் காரணமாக வீடே தீப்பற்றித் தனக்கே ஆபத்தைத் தேடிக் கொள்வது போன்றதாகும். "விளக்கெலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல்' என்பது பழமொழி.

முழு கட்டுரையைப் படிக்க →