தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி


தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்து அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறியல்ல சொல்லல்நீ, பாண! அறிதுயில்
யார்க்கும் எழுப்பல் அரிது. (பாடல்-222)

தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடையவரான பரத்தையர்களின் மார்பினைத் தன் மார்பிலே சேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன் மயங்கிக் கிடக்கின்ற அச்செயலானது முறைமை உடையதன்று. அதனை நீ, அவனிடம் சொல்லாதிருப்பாயாக. பாணனே, "பொய் தூக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல்' என்பது எவருக்குமே முடியாத செயலாகும். "அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது'  என்பது பழமொழி. (பாடபேதம்: தொடித்தோள் மடவார் துணை முலை ஆகம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT