தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பெரிய வளைந்த மூங்கிலை வென்ற புருவத்தை உடையவளே!

தினமணி

விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,
இரும் பணை வில் வென்ற புருவத்தாய், ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து.     (பாடல்: 286)


பெரிய வளைந்த மூங்கிலை வென்ற புருவத்தை உடையவளே! தம்மை வந்து தஞ்சமாகச் சேர்ந்தவர்க்கும், உறவினர்க்கும், பசியால் வருந்தி வருபவர்க்கும் எதுவுமே செய்யாமல் அறிமுகமே இல்லாமல் வரும் புதியோர்க்கு உதவுபவர் கரிய பனை மரத்தைப் போன்றவர் ஆவார். பனை வித்து இட்டவர்க்குக் காய் காய்த்து உதவாது. பல ஆண்டுகள் கழித்து (வித்திட்டவர் இறந்த நிலையில்) மற்றவர்க்குப் பனை நுங்கைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT