தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

DIN


இரப்பார்க்கு உதவாத பொருள்
நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய 
மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை 
அஞ்சிலென் அஞ்சா விடிலென், குருட்டுக்கண் 
துஞ்சிலென் துஞ்சாக்கால் என்? (பாடல்-238)

கண் குருடானால், அவர் தூங்கினாலும் விழித்திருந்தாலும் பயன் ஒன்றுதான். அவர் எதையும் காணமாட்டார். அதுபோலவே, தம் நாவினாலே "ஒரு பொருளைத் தருக' என்று கேட்டவர்களது குறையினைக் கேட்டு அறிந்தும், தம்முடைய செல்வத்தினை மாட்சியமைப்பட பூட்டிக் காப்பவர்கள், பிற தீவினைகளுக்கு அஞ்சினாலென்ன? அஞ்சாவிட்டால்தான் என்ன? அந்த ஒரு தீவினையே அவர்களுக்குக் கேடாக முடிந்துவிடும்! "குருட்டுக்கண் துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT