பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
பெரிய புன்னை மரத்திலுள்ள பூக்களின் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கிவிடுகின்ற கடல் துறைகளை உடையவனே!
கருந்தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்
பெரும்பழி யேறுவ பேணார்-இரும்புன்னை
புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று அஞ்சாதே
தின்பது அழுவதன் கண். (பாடல்-262)
பெரிய புன்னை மரத்திலுள்ள பூக்களின் நறுமணமானது, புன்மையான புலால் நாற்றத்தினைப் போக்கிவிடுகின்ற கடல் துறைகளை உடையவனே! சிறு பிராணிகளை அடித்துத் தின்னும்போது அவை வருந்தும். அதுகண்டு, தின்னும் பெரிய விலங்குகள் அஞ்சி அவற்றைத் தின்னாது போவதில்லை. அதுபோலவே, எப்போதும் கொடிய செயல்களையே செய்பவரான கீழ்த்தரமானவர்கள், தம்மேல் பெரும் பழிச்சொற்கள் ஏறிக்கொண்டே போவதைக் கண்டாலும்கூட, அதனைப் பொருட்படுத்தாது, அவற்றிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுவார்கள். "அஞ்சாதே தின்பது அழுவதன் கண்' என்பது பழமொழி.