தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

நினைத்த இதுவென்றந் நீர்மையே நோக்கி
மனத்தது அறிந்தீவார் மாண்டார்-புனத்த 
குடிஞை இரட்டும் குளிர்வரை நாட!
கடிஞையில் கல்லிடுவார் இல்.  (பாடல்-126)


புனத்து இடங்களிலே, கோட்டான் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் குளிர்ந்த மலைகளை உடைய நாடனே! ஒருவன் பிச்சை எடுத்து உண்ணும் ஓட்டிலே போய்க் கல்லைக் போடுபவர்கள் உலகில் எவரும் இல்லை; ஆனால், அறிவினாலே மாட்சிமை உடைய சான்றோர்களோ, தம்மிடத்தே இரந்து வருபவர் "தம் உள்ளத்திலே எண்ணியது இது' என்று அவருடைய தன்மை யையே ஆராய்ந்து பார்த்து, அவர் மனத்திலுள்ளதை அறிந்து, அதற்கேற்பக் கொடுத்து உதவுபவராகவே இருப்பார்கள். "கடிஞையில் கல்லிடுவார் இல்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT