முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு

தன்னால் இச்செயலை முடிக்க முடியுமா என்ற அளவில் ஆய்ந்து, துணைக்கு உரியவரையும் அளவிட்டு, மேற்கொள்ளும் செயலால் விளையும் பயனை மதிப்பிட்டு ஒரு செயலை அறிவு வல்லவர்கள் மேற்கொள்வர்.

Updated On : 27 ஆகஸ்ட், 2023 at 5:27 PM
பகிர்:

முன்றுறையரையனார்

தன் - தூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றுஅது கொள்வ, மதி வல்லார், அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும்.           (பாடல்: 321)

தன்னால் இச்செயலை முடிக்க முடியுமா என்ற அளவில் ஆய்ந்து, துணைக்கு உரியவரையும் அளவிட்டு, மேற்கொள்ளும் செயலால் விளையும் பயனை மதிப்பிட்டு ஒரு செயலை அறிவு வல்லவர்கள் மேற்கொள்வர். அவ்வாறு இல்லாமல் எதையோ ஒன்றைக் கொண்டு எதையோ செய்ய நினைத்தால் ஏதேனும் ஒன்றாக முடிந்து விடும். அதாவது தவறாக முடிந்து விடும்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.