தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நட - அத்தா! நின் நடை
நின்இன்று அறிகிற்பால் இல். (பாடல்: 288)
தலைவனே! தன்னைப் பற்றியும் அறியாது, தம் சுற்றத்தார் பற்றியும் அறியாது, நல்லொழுக்க நெறியும் அறியாது, சின்னவர்போல் ஆகாது உன்னை நீயே அறிந்துகொள். உன் உயர்ந்த குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படி நடந்துகொள். ஏனென்றால், உன்னைப் பற்றி அறிந்தவர் உன்னைவிட வேறு எவரும் இருக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.