முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலைநாட்டவனே!  நெய், திரி ஆகியவற்றை வாங்குவது விளக்கினால் ஒளியைப் பெறலாம் என்பது கருதி ஆகும்.  

Updated On : 26 நவம்பர், 2023 at 5:41 PM
பகிர்:

விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத் 
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி, விளக்கு 
மருள் படுவதுஆயின், - மலை நாட! - என்னை? 
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள்.    (பாடல்: 334)


மலைநாட்டவனே!  நெய், திரி ஆகியவற்றை வாங்குவது விளக்கினால் ஒளியைப் பெறலாம் என்பது கருதி ஆகும்.  மாறாக, விளக்கு நன்றாக ஒளிவிடாது இருள் சூழுமானால் அப்பொருள்களை வாங்கினதால் என்ன பயன்? அதுபோல, பொருளைச் செலவழித்து கல்வியைப் பெற ஒருவரிடம் போகிறோம். அறியாமை இருள் நீங்கவில்லையென்றால் கல்வியால் என்ன பயன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.