வாரியார் வாக்கு
எந்த வேளையும் இறைவனை நினைக்க வேண்டும். அது ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் மூன்று வேளைகளில் தவறாமல் நினைக்கவும்.
எந்த வேளையும் இறைவனை நினைக்க வேண்டும். அது ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் மூன்று வேளைகளில் தவறாமல் நினைக்கவும். காலை எழுந்தவுடன் "இறைவனே, இன்று நல்வழியில் நிற்க அருள்புரி' என்று தொழுங்கள். உணவு உட்கொள்ளும்பொழுது, "இறைவனே இந்த உணவினால் எனக்கு நல்ல அறிவும் அன்பும் உண்டாக அருள்புரி' என்று தொழுங்கள். இரவில் படுக்கப் போகும்போது இறைவனே இந்த உறக்கத்திலே உன் எண்ணமே நிற்க அருள் புரி' என்று தொழுங்கள்.