தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
தமிழ்நாட்டில் 6 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு சதவிகிதம்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு , மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 6 மணி நிலவரப்படி 84.51 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில், கடும் வெய்யிலையும் பாராமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
Advertisement
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றாலும், 6 மணிக்குள் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 84.35 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாவட்டவாரியாக விவரம்... (சதவிகிதத்தில்)
அரியலூர் - 85.33
செங்கல்பட்டு - 84.26
சென்னை - 83.15
கோயம்புத்தூர் - 84.40
கடலூர் - 84.57
தருமபுரி - 89.87
திண்டுக்கல் - 88.29
ஈரோடு - 89.77
கள்ளக்குறிச்சி - 86.89
காஞ்சிபுரம் - 86.81
கன்னியாகுமரி - 75.46
கரூர் - 91.92
கிருஷ்ணகிரி - 84.65
மதுரை - 80.20
மயிலாடுதுறை - 81.01
நாகப்பட்டினம் - 85.35
நாமக்கல் - 89.46
பெரம்பலூர் - 85.17
புதுக்கோட்டை - 83.37
ராமநாதபுரம் - 76.18
ராணிப்பேட்டை - 88.58
சேலம் - 90.19
சிவகங்கை - 76.07
தென்காசி - 81.48
தஞ்சாவூர் - 80.07
நீலகிரி - 78.43
தேனி - 80.85
தூத்துக்குடி - 79.75
திருச்சிராப்பள்ளி - 85.04
திருநெல்வேலி - 77.44
திருப்பத்தூர் - 87.67
திருப்பூர் - 88.22
திருவள்ளூர் - 82.89
திருவண்ணாமலை - 88.06
திருவாரூர் - 82.86
வேலூர் - 87.74
விழுப்புரம் - 87.67
விருதுநகர் - 84.15
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 91.92 சதவிகிதமும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 75.46 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.