ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அந்தியூருக்கு வடக்குத் திசையில் 2 கி. மி. தொலைவில் உள்ளது புதுப்பாளையம். இங்குள்ள அருள்மிகு குருநாதஸ்வாமி திருக்கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு காமாட்சி அம்மன், அருள்மிகு பெருமாள் சுவாமி, அருள்மிகு குருநாதஸ்வாமி தெய்வங்கள் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறை போக்கித் திருவருள் கடாட்சம் புரிந்து, நம்பிக்கையோடு வழிபடும் பக்தர்களுக்கு வேண்டியதை கொடுத்தருளுகிறார்கள். இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் ஆடிப்பெருந் தேர்த்திருவிழா இவ்வருடம் ஆக. 13 முதல் 16 வரை சிறப்பு அலங்காரங்களுடனும், இன்னிசைக் கச்சேரிகளுடனும் நடைபெறுகிறது. பல குடும்பங்களுக்கு குலதெய்வமாக குருநாதஸ்வாமி விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு : 9842646206
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.