சென்னை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே திருக்கழுகுன்றம் செல்லும் சாலையில் அரையப்பாக்கம் கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ அருணாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
முற்றிலும் சிதைந்து விட்ட நிலையில் உள்ள ஆலயத்தை மடிப்பாக்கம், "ஓம் ஸ்ரீ ஜகத்குரு ஸனாதன கைங்கர்ய சேவாசமிதி'யின் மூலம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொழுது பாணத்திருமேனியில் கண்கள் தோன்றுவது சிறப்பு. ஆலயத்தின் அருகிலுள்ள திருக்குளம் சிறப்பு வாய்ந்ததாகும்.
அருள்கொண்டு விளங்கும் இவ்வாலயத்திற்கு புத்துயிர் அளிக்க கிராம பேரன்பர்கள் முனைந்துள்ளார்கள். விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ள இந்தத் திருப்பணியில் நாமும் பங்கு கொண்டு இறையருள் பெறுவோமாக!
தொடர்புக்கு: 72008 18604 / 98409 51959.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.