முருகனின் திருக்கோலங்கள்
வலது திருப்பாதத்தில் பாதக்குறடு துலங்க, இடது திருப்பாதத்தை மயிலின் முதுகில் வைத்தபடி
• வலது திருப்பாதத்தில் பாதக்குறடு துலங்க, இடது திருப்பாதத்தை மயிலின் முதுகில் வைத்தபடி அழகுக் கோலம் காட்டும் முருகப்பெருமானை சீர்காழிக்கு அருகில் உள்ள திருமயிலாடியில் தரிசிக்கலாம்.
• விரிஞ்சிபுரத்தில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக ஆறுமுகத்துடன் மயில் மீது அமர்ந்து போர்க்கோலம் பூண்டு விஸ்வரூபமாக காட்சி தருகிறார்.
• திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.
Advertisement