செங்கற்பட்டு வட்டம், ஆத்தூரில் அமையப்பெற்ற அற்புதமான ஆலயம், அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயமாகும். இவ்வாலயத்தை சுற்றி அமைந்துள்ள ஏழு சிவாலயங்களுள் 5 ஆம் திருக்கோயிலாக அமையப்பெற்றுள்ளது அருள்மிகு நாகரத்தினாம்பாள் என்கிற அங்கையற்கன்னி உடனுறை அருள்மிகு முக்தபுரீஸ்வரர் என்கிற அக்ஷ்யசக்தி நாதர் ஆலயமாகும். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பராமரிப்பு இல்லாமல் இருந்த இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கல்வெட்டினை ஆராய்ந்தபோது இவ்வாலயமும் அருகில் உள்ள வீர நாராயண புத்தேரி என்ற ஏரியும் முதலாம் பராந்தக சோழனால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது என தெரிய வருகிறது.
இவ்வாலய சுவாமியையும், அம்பாளையும் அஷ்டநாகர்களும் வழிபட்டு நாக ராஜ பதவியை அடைந்தனர் என்பதால், இந்தத் தலம் நாக தோஷத்தினால் ஏற்படும் துயரங்களை களைய வல்லது ஆகும். பெருமை மிகுந்த இவ்வாலயத்தின் திருப்பணியில் பக்தர்கள் பங்கு கொண்டு பலன் பெறலாம்.
தொடர்புக்கு: 97877 03903/ 93827 83542.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.