சங்குகள்
வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு, சலஞ்சலம், பாஞ்சஜன்யம்.
* வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு, சலஞ்சலம், பாஞ்சஜன்யம்.
* ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு நடுவே ஒரு வலம்புரிச் சங்கு இருக்கும். ஆயிரம் வலம்புரிச் சங்குகளுக்கு நடுவில் ஒரு சலஞ்சலம் என்னும் சங்கு வரும். ஆயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு நடுவே ஒரு பாஞ்சஜன்யம் சங்கு வரும். விஷ்ணுவின் கையிலுள்ள சங்கு பாஞ்சஜன்யமாகும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது சங்கை அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவதுண்டு. ஒற்றைச்சங்கை அபிஷேகத்துக்குப் பயன்படுத்தும்போது கலசத்திலுள்ள தீர்த்தத்தை உத்தரணியால் சங்கிலிட்டு அதை அபிஷேகம் செய்ய வேண்டும். நேரிடையாகச் சங்கையே தண்ணீரில் விட்டு தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யக்கூடாது. தனிச் சங்கினால் அபிஷேகம் செய்வதானாலும் 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்வதானாலும் முதலில் சங்குக்குப் பூஜை செய்தபின்னரே அபிஷேகம் செய்ய வேண்டும்.
Advertisement