சிவனுக்கு உகந்த மலர்கள்
சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம்,
சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், அரளி, பாதிரி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களை பயன்படுத்தலாம். இம்மலர்கள், "அஷ்டபுஷ்பங்கள்' எனப்படுகின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்பதில்லை. இம்மலர்களைப் படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டுமென்பதில்லை. "நமசிவாய' என ஐந்தெழுத்து மந்திரத்தை மனப்பூர்வமாக உச்சரித்து வழிபட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கும் பலன் கிடைத்துவிடும்.
- எல். மோகனசுந்தரி