பலன் தரும் பரிகாரத் தலங்கள்
காரைக்குடியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் அன்னதானம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
காரைக்குடியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோயிலில் அன்னதானம் செய்து வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மூலவரே உற்சவராக உள்ள கோயில்களில் ஒன்று கொப்புடை நாயகி அம்மன் கோயில். காரைக்குடி பேருந்து நிலையம் அருகே கல்லுகட்டி என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கருப்பண்ணசாமி மற்றும் பைரவர் சந்நிதிகள் உள்ளன. இங்கு அன்னதானம் செய்து வழிபட்டால் வரவேண்டிய பணம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
லஷ்மி நரசிம்மர் கோயிலில் சக்கரத்தாழ்வார் தனி சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். இக்கோயில் காரைக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள அரியக்குடியில் அமைந்துள்ளது.
Advertisement
லஷ்மி நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கடன் பிரச்னைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.
பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோயிலில் இரண்டு கால்களையும் மடித்து வடக்கு நோக்கி அமர்ந்து பிள்ளையார் குபேரனை நோக்கி அமர்ந்திருக்கிறார். மேலும் அர்ஜுனவனேஸ்வரர், சிவகாமி தாயார், பைரவர் சந்நிதிகளும் உள்ளன. இங்கு அன்னதானம் செய்து வழிபட்டால் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம்.