முகப்பு
வெள்ளிமணி

நல்லருள் நாயகன் சுவாமி ஐயப்பன்

செங்கல்பட்டு நகரில் ஐயப்பன் கோயில் இல்லையே என்கிற பக்தர்களின் எண்ணத்தை நிறைவேற்ற ஐயப்ப சேவா சங்கத்தின் மூலம் கடந்த 1984 -இல் ஐம்பொன்னால் ஐயப்பன் சிலை உடைய கோயில் உருவாக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:51 PM
பகிர்:


செங்கல்பட்டு நகரில் ஐயப்பன் கோயில் இல்லையே என்கிற பக்தர்களின் எண்ணத்தை நிறைவேற்ற ஐயப்ப சேவா சங்கத்தின் மூலம் கடந்த 1984 -இல் ஐம்பொன்னால் ஐயப்பன் சிலை உடைய கோயில் உருவாக்கப்பட்டது. 

இக்கோயிலைச் சுற்றி விநாயகர் சந்நிதி, குருவாயூரப்பன் சந்நிதி, துர்கையம்மன் சந்நிதி,  பாலமுருகன் சந்நிதி மற்றும் கொடிமரம், பலிபீடம் மற்றும் தியான மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. 

இக்கோயிலின் முக்கிய திருவிழாவாக ஆராட்டு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில்  கோதண்டராமர் திருக்கோயிலின் குளத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியை மேல்சாந்தி நம்பூதிரி செய்து வைப்பார். பின்னர்  சிறப்பு அலங்காரத்துடன்  சுவாமி ஐயப்பனை யானை மீது வைத்து, சுமங்கலி பெண்கள் திருவிளக்குகள் ஏந்தியபடி வர, பஞ்சவாத்தியம் முழங்க முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஐயப்ப சுவாமி காட்சியளிப்பார். 

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நல்லருள் நாயகன் சுவாமி ஐயப்பனை வேண்டினால் ஐயப்பனே குழந்தையாகப் பிறப்பான் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். 

முழு கட்டுரையைப் படிக்க →