வெள்ளிமணி

பொன்மொழிகள்!

சுப்பிரமணிய ஸ்தோத்திரம் ஆறு எழுத்து மந்திரமாகும். அதை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் விரும்புவதற்கும் அதிகமாக அவனது எண்ணங்கள் நிறைவேறுகின்றன.

சுவாமி கமலாத்மானந்தர்

"சுப்பிரமணிய ஸ்தோத்திரம் ஆறு எழுத்து மந்திரமாகும். அதை எவன் எப்போதும் படிக்கிறானோ, அவன் விரும்புவதற்கும் அதிகமாக அவனது எண்ணங்கள் நிறைவேறுகின்றன.
 -குமாரதந்திரம் (ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திரஸ்தவம்)

"கல்வியை விரும்புபவன் கல்வியையும், செல்வத்தை விரும்புபவன் செல்வத்தையும், மகப்பேறு விரும்புபவன் மகப்பேற்றையும், முக்தியை நாடுபவன் முக்தியையும் அடைவார்கள்.
 -ஸ்ரீ நாரத புராணம் (சங்கஷ்டநாசன கணேச ஸ்தோத்திரம்)

"பிரம்மம்தான் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களாக இருக்கிறது. -பிரச்ன உபநிஷதம்

"சிறிய பொருளையும் இகழாதே, சிறிய பொருளையும் அவமதிக்காதே. உன் வலக் கையில் செயல்திறமை இருக்கிறது; உன் இடக் கையில் வெற்றி இருக்கிறது. -அதர்வ வேதம்

"ஸ்ரீ ராமர் சொன்னது: நீ உன்னை சம்சாரத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் விருப்பமுடையவன். ஆதலால் நீ என்னுடைய உண்மையான சொரூபத்தை நன்கு அறிவதற்காக, உடனே வேதாந்தங்களைக் கற்பதில் ஈடுபட வேண்டும். -ஸ்ரீ ராம கீதை

"மனதை அடக்கி உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது, வேதம் ஓதுவதற்கும் வேள்வி செய்வதற்கும் சமமானது. -வேதாந்த தீபம்

"ஜீவராசிகள் அனைத்தையும் பாதுகாப்பதும், தீயசக்திகளை நாசம் செய்வதும் கருணை எனப்படும்.  -மகான் துக்காராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT