வெள்ளிமணி

சிவ (நவ) தாண்டவம்

நவராத்திரியில் சிவபெருமான் ஆடிய தாண்டவங்களின் மகிமை

இணையதளச் செய்திப் பிரிவு

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்தத் தாண்டவங்களிலிருந்து நவ துர்கை தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.

ஆனந்த தாண்டவம்: வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷி மண்டல கோலத்தில் தோன்றியவள் ஸ்ரீ சைலபுத்திரி.

சந்தியா தாண்டவம்: பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இடக்கால் விரலால் சிவனார் இடும் கோலம் சப்த ஒலிக் கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.

திரிபுர தாண்டவம்: ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப்பட்டது அஷ்ட வகை கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.

ஊர்த்துவ தாண்டவம்: திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியைத் தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவ கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்திர காந்தா தேவி.

புஜங்க தாண்டவம்: பாற்கடலின் ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தைப் பிடித்து, விஷம் உள்ளே இறங்காமல் தடுத்தார் பார்வதி. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்னும் பெயர் உண்டு. அப்போது ஏற்பட்ட புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்த மாதா.

முனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.

பூததாண்டவம்: கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்திரி.

சுத்த தாண்டவம்: தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம் . இதில் தோன்றியவர் மகாகெüரி.

சிங்கார தாண்டவம்: நவரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம். இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்திரி.

மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT