வெள்ளிமணி

சக்தி மிக்க நைவேத்தியங்கள்...

கேரளத்தில் உள்ள பிரபல கோயில்களில் சக்தி மிக்க நைவேத்தியங்கள் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

கேரளத்தில் உள்ள பிரபல கோயில்களில் சக்தி மிக்க நைவேத்தியங்கள் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.

திருவிழா மகாதேவர் கோயிலில் மூலிகைகளைச் சாறு எடுத்து அதை பாலுடன் கலந்து சிவனுக்கு நைவேத்தியம் செய்கின்றனர். பின்னர், அது பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த மூலிகைப் பால் வயிற்றுக் கோளாறுகளைச் சரி செய்யும் சக்தி கொண்டது.

கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின்போது, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமுடைய கஷாயம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

குருவாயூரப்பன் கோயிலில் சுண்டக் காய்ச்சிய பால் பாயசத்தை நைவேத்தியமாகப் படைக்கின்றனர்.

கொட்டாரக்கராவில் விநாயகருக்கு சுடச்சுட நெய்யப்பம் படைத்துக்கொண்டேஇருக்கின்றனர். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.

மகாலெக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரிடா் தொடா்பாக புகாா் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் அறிவிப்பு

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

ஆஷஸ்: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டார்க்! ஜோ ரூட், கிராவ்லி டக்-அவுட்.. இங்கிலாந்து திணறல்!

கரூரில் கோயில் நில மீட்பு விவகாரம்: ஜோதிமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்கு

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT