ஆப்கன் தலைநகரில் தற்கொலைபடை தாக்குதல்: 2 பேர் பலி, 7 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வெளிநாட்டு விருந்தினர் மாளிகையில் தலிபான் தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள வெளிநாட்டு விருந்தினர் மாளிகையில் தலிபான் தற்கொலைபடையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் காயமடைந்தனர்.
ஹாயிர்பூர் பகுதியில் உள்ள ஸ்பானிஷ் தூதரகத்தை சேர்ந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியே உள்ளூர் நேரப்படி (மாலை 5.40 மணிக்கு) பயங்கரவாதிகள் இந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியுள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு அதிகாரி உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் குழு பொறுப்பெற்றுள்ளது.