சவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி
சவூதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சவூதி அரேபியாவின் ஜிஸான் நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மருத்துவமனையின் முதல் தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாகவும், இந்த தளத்தில் தான் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகள் இயங்கி வந்தன.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 25 பேர் தீயில் சிக்கி பலியாகினர்.
Advertisement
நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.