பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: சாவு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அரசு அலுவலகத்தில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
பெஷாவர் நகரில் உள்ள தேசிய தரவு மையம் மற்றும் பதிவு அலுவலகத்துக்கு இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபரை, வாயிலின் அருகே பாதுகாவலர் தடுத்து நிறுத்திய போது, அவர் தன்னிடமிருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தார்.
அவர் சுமார் 12 கிலோ அளவுக்கு வெடிப் பொருளை எடுத்து வந்திருக்காலம் என போலீஸார் தெரிவித்தனர்.
Advertisement
தற்கொலை தாக்குதல் நடத்திய நபர், வாயில் அருகே தடுத்து நிறுத்தப்படவிட்டால் உயிர் சேதம் அதிகமாக இருந்திருக்கும். சம்பவத்தின் போது அந்த அலுவலகத்தில் சுமார் 400க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
இச்சம்பவத்தில் 23 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தின் அருகே மனித உடலின் பாகங்கள் சிதறி கிடந்தன. படுகாயமடைந்த பலர் மர்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தெரீக்-ஐ-தாலிபான் என்ற அமைப்பு இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளது. இதே அமைப்பு கடந்த ஆண்டு வாஹா எல்லையில் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.