முகப்பு
உலகம்

ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோஹினூர் வைரம் பிரிட்டனிடம் அளிக்கப்பட்டது: பாகிஸ்தான்

கோஹினூர் வைரத்தை பாகிஸ்தான் திரும்பக் கொண்டு வராது என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2016 at 5:25 PM
பகிர்:

லாகூர் : கோஹினூர் வைரத்தை பாகிஸ்தான் திரும்பக் கொண்டு வராது என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோஹினூர் வைரத்தை திரும்பக் கொண்டு வருவது தொடர்பான வழக்கு விசாரணையில், பதில் அளித்த பஞ்சாப் மாகாண அரசு, கோஹினூர் வைரத்தை பிரட்டனிடம் கொடுத்த போது ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

1849ம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் கிழக்கிந்திய கம்பெனியும், மகாராஜா ரஞ்ஜீத் சிங்கும் கையெழுத்திட்டுள்ளனர். அதில் கோஹினூர் வைரத்தை இந்தியா, பிரிட்டனிடம் அளிப்பதாகவும், அதனை திரும்பக் கேட்காது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.