முகப்பு
உலகம்

இந்தோனேஷியாவின் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் மாயம்

இந்தோனேஷியாவில் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 10:15 AM
பகிர்:


ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் சிங்கப்பூருக்கு அருகே பேட்டம் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானம் மாயமாகியுள்ளது. இந்த விமானத்தில் 5 விமானப் பணியாளர்களும், 8 பயணிகளும் இருந்துள்ளனர்.

விமானம் பங்க்கா தீவில் இருந்து புறப்பட்டு 50 நிமிடத்தில் தொடர்பில் இருந்து வெளியேறியது. உடனடியாக தேசிய மீட்புக் குழுவினர் விமானம் மாயமான இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.