இந்தோனேஷியாவின் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் மாயம்
இந்தோனேஷியாவில் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளது.
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 13 பேருடன் சென்ற போலீஸ் விமானம் தகவல் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் சிங்கப்பூருக்கு அருகே பேட்டம் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது விமானம் மாயமாகியுள்ளது. இந்த விமானத்தில் 5 விமானப் பணியாளர்களும், 8 பயணிகளும் இருந்துள்ளனர்.
விமானம் பங்க்கா தீவில் இருந்து புறப்பட்டு 50 நிமிடத்தில் தொடர்பில் இருந்து வெளியேறியது. உடனடியாக தேசிய மீட்புக் குழுவினர் விமானம் மாயமான இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.