முகப்பு
உலகம்

பாக்தாத் இரட்டைக் குண்டு வெடிப்பு: 28 பேர் பலி!

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த இரண்டு சாலையோர குண்டு வெடிப்பு சம்பவங்களில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 7:02 PM
பகிர்:

பாக்தாத்: ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இன்று நடந்த இரண்டு சாலையோர குண்டு வெடிப்பு சம்பவங்களில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான சினாக் பகுதியில் உள்ள கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் சந்தை ஒன்றிலும்,  அதன் அருகில் உள்ள தபால் நிலையம் ஒன்றிலும் இன்று காலைஅடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.  இந்த கோர சம்பவத்தில் 28 பேர் பலியாகினர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.