எகிப்து விமானக் கடத்தலில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பில்லை: சைப்ரஸ் அதிபர் விளக்கம்
எகிப்தில் பயணிகள் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு தொடர்பில்லை என்று சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாஸியட்ஸ் தெரிவித்துள்ளார்.
கெய்ரோ: எகிப்தில் பயணிகள் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாத இயக்கங்களுக்கு தொடர்பில்லை என்று சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாஸியட்ஸ் தெரிவித்துள்ளார்.
எகிப்து நாட்டின் அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.
கடத்தப்பட்ட விமானம் சைப்ரஸ் நாட்டின் லார்நக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட விமானத்தில் 55 பயணிகள் உள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், விமானத்தில் இருந்த ஒரு பயணியே, விமானத்தைக் கடத்திச் சென்றதாகவும், அவருடன் மன வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற சைபீரியாவைச் சேர்ந்த தனது மனைவியை பார்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட எகிப்து பயணிகள் விமானத்தில் சுமார் 55 பேர் இருந்ததாக விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்தது. அதில் இருந்து பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலான பயணிகளை வெளியேற்ற கடத்தல்காரர் ஒப்புக் கொண்டுள்ளார்.