உலகம்

ஏமன் சிறை மீது விமான தாக்குதல் நடத்திய அராபிய கூட்டுப்படைகள்: 33 பேர் பலி!

DIN

சனா: அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் மீது அரேபிய கூட்டுப்படைகள் நடத்திவரும் தாக்குதலின் ஒரு பகுதியாக,  ஏமன் சிறை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 33 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏமன் அதிபர் அப்த்-ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக, ஈரான் நட்டு அரசின் ஆதரவுபெற்ற ஹவுத்தி இனப் போராளிகள் புரட்சியிவ் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்தும், அவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காகவும் சவுதி அரேபியா தலைமையிலான அரேபிய கூட்டுப்படைகள், ஹவுத்தி இனப் போராளிகள் மீது 2015-ஆம் ஆண்டு  மார்ச் மாதத்தில் இருந்து தொடர் தாக்குதலை  நடத்தி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ஏமனின் அல்-ஜைதியா மாநிலத்தில் உள்ள ஹொடைடா நகரச் சிறையின் மீது அரேபிய  கூட்டுப்படைகள் நேற்று மாலை விமான தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் 33 பேர் பலியானதாக அங்கிருந்த வரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT